articles

img

பெரு நிறுவனங்கள் வழிநடத்தும் வளர்ச்சியா? பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சியா? -பிருந்தா காரத்

எப்படி ‘சீர்திருத்தம்’ என்ற சொல், முதலாளித்துவம் அடிக்கும்  கொள்ளை லாபத்தை மூடி மறைப்பதற்கான ஒரு முகமூடியாக இருக்கிறதோ, அதே போன்றே  பெண்கள் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்களும், அரசு அளித்திடும் முதலீடுகளை குறைத்திருப்பதை மறைப்பதற்கான ஒன்றாகவே இருந்திருக்கின்றன.

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஜி.20 உச்சிமாநாடு, ஒரு பிரகடனத்தை நிறை வேற்றியது. அந்தப் பிரகடனமானது, “பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதத்தில் உழைக்கும் குழு” (working group on the empower ment of women) அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதன் காரணமாக இது வரவேற்கத் தக்கதாகும். ஆனாலும், கடந்த காலங்களில் இவ்வாறு அமைக்கப்பட்ட “உழைக்கும் குழுக்கள்” அனைத்துமே அநேகமாக அமல்படுத்தப்படவில்லை. எடுத்துக்காட்டாக, பாலின இடைவெளியைச் சரிசெய்திட வேண்டும் என்ற குறிப்பிட்ட நோக்கத்தோடு,   “நிலையான வளர்ச்சி இலக்குகள்” (Sustainable Development Goals)” என்னும் குழு அமைக்கப்பட்டது. எனினும் “2030இன் மத்தியவாக்கில், நிலையான வளர்ச்சி இலக்கின் முன்னேற்றம் என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 12 விழுக்காட்டு அளவைக்கூட தாண்டவில்லை” என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரகடனம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

பாலின சமத்துவம் குறித்த பிரிவு கூறுவதாவது: “நாங்கள் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம். மேலும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும், பொருளாதாரத்தின் அனைத்து மட்டங்களிலும் சுறுசுறுப்பான முறையில், உலக ளாவிய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் தீர்மானகரமான முடிவுகளை எடுப்பவர்களாக பெண் கள் முழுமையாகவும், சமத்துவத்துடனும், வலுவான முறையிலும், அர்த்தமுள்ள வகையிலும் பங்கேற் பதை மேம்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம். …”

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி” என்ற சொற்றொடர் உண்மையில் வியக்க வைக்கிறது. இந்தச் சொற்றொடர், ஒன்றிய அரசின் கண்டுபிடிப்பு தான். ஆனால் உண்மையில் இதன் பொருள் என்ன என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படும்போது, இத்தகைய வளர்ச்சிக்கு பெண்கள் எப்படிப் பயன்படுத்தப்படு வார்கள் என்று இதனைக் கூறிடும் தலைவர்கள் குறிப் பிட்டிருக்க வேண்டும். உண்மையில், தங்களை ஜன நாயக நாடுகள் என்று கூறிக்கொள்ளும் நாடுகள் பலவற்றில் (குறிப்பாக மேற்கத்திய நாடுகளில்) நிறை வேற்றப்பட்டுள்ள ‘வளர்ச்சி மாடல்கள்’ அனைத்துமே நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்குள்ளேயே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயும்,  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயும் சமத்துவமின்மையை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. 

அநேகமாக அனைத்து நாடுகளிலுமே பெரும் வர்த்தக நிறுவனங்கள், வரிச் சலுகைகள், வங்கியில் வாங்கியுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்தல், நிலங்களை மானிய விலையில் வாங்குதல், வேலை வாய்ப்பையும் மூலதனத்தையும் பெருக்குகிறோம் என்று சொல்லி நாடுகளுக்கிடையே மிகவும் தாராள மாக நிதி மூலதனத்தை எடுத்துச் செல்லுதல் என்று அந்நாடுகள் அளித்திடும் அனைத்துச் சலுகைகளை யும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. 

‘அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லா விட்டால் அதுதான் நல்ல அரசாங்கம்’ என்கிற இவர்களின் வேண்டுகோள்களின்படி அரசாங்கம் கடைப்பிடித்து வந்த ஒழுங்கு விதிமுறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன, பொதுச் சொத்துக் கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையுமே சீர்திருத்தங்கள் என்ற பெயரால் செய்துள்ளார்கள். ஜி.20 உச்சி மாநாட்டின் பிரகடனம் இதனை உறுதி செய்திருக்கிறது. “வளர்ச்சித் திட்டங்களையும் நிலை யான பொருளாதார மாற்றங்களையும்  முன்னெ டுத்துச் செல்வதில் தனியார் துறையின் முக்கியமான பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம்,” என்று அது கூறியிருக்கிறது. இதிலே எங்கே பெண்கள் தலை மையிலான வளர்ச்சி பொருத்தப்பட்டிருக்கிறது?

“பெண்களின் வளர்ச்சியிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி” என்று தலைப்பிட்டு, பெண்கள் பயன்பெறும் அரசாங்கத்தின் திட்டங்கள் என்று கூறி ஒரு பட்டியலை, ஒன்றிய அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மார்ச் 7 அன்று வெளியிட்டது. எப்படி ‘சீர்திருத்தம்’ என்ற சொல், முத லாளித்துவம் அடிக்கும் கொள்ளை லாபத்தை மூடி மறைப்பதற்கான ஒரு முகமூடியாக இருக்கிறதோ, அதே போன்றே பெண்கள் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்களும், அரசு அளித்திடும் முதலீடு களை குறைத்திருப்பதை மறைப்பதற்கான ஒன்றா கவே இருந்திருக்கின்றன.

பாலின பட்ஜெட் 2005-2006-இல் தொடங்கியது. இது இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று, 100 விழுக்காடு பெண்களுக்கான திட்டங்கள். இரண்டாவது பகுதி, அனைத்து அரசாங்கத்தின் திட்டங்களிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான செலவினமாக இருந்திடும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்று கூறும்போது, பாலின பட்ஜெட்டின் மொத்தத் தொகையில் பெண்களுக்குக் கணிசமான அளவிற்கு கூடுதல் தொகை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் இவ்விரண்டு பகுதிகளிலுமே எதிர் மறைப் போக்கே ஆதிக்கம் செலுத்தியது. 2023-24க்கான மொத்த பாலின பட்ஜெட்டில், சென்ற ஆண்டு 5.2 விழுக்காடாக இருந்த செலவினம், 5 விழுக் காடாகக் குறைக்கப்பட்டது. சராசரியாக, பாலின பட்ஜெட் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, கணிசமான உயர்வு எதுவும் அளிக்கப்படவில்லை. அது எப்போ தும் 4 விழுக்காட்டுக்கும் 6 விழுக்காட்டுக்கும் இடையே தான் இருந்து வந்திருக்கிறது.

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி” என்ற சொற்றொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2023-24இலேயே, பாலின பட்ஜெட்டின் முதல் பகுதியில் செல வினம் மொத்தத் தொகையில் சுமார் 39 விழுக்காடா கவும், இரண்டாவது பகுதியில் மொத்தத் தொகை யில் சுமார் 61 விழுக்காடாகவும் இருந்தது.  வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், ஏற்கனவே மிகவும் குறைவாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக் கீட்டில், முழுக்க முழுக்க பெண்களுக்கான திட்டங்க ளுக்கு, வெறும் 40 விழுக்காடு தொகையே ஒதுக்கப் பட்டது.

பொருளாதார சுதந்திரம்
பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் முன் நிபந்தனையாக இருப்பது அவர்களுக்குப் பொரு ளாதார சுதந்திரம் அளிக்கப்படுவதேயாகும். எனினும், நிரந்தர ஊதியம் பெறும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. காலமுறையிலான தொழிலாளர் நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையானது, (PLFS-Periodic Labour Force Survey), 2018-19இல் முறை யான வேலையில் நிரந்தர ஊதியம் பெற்ற பெண்கள் 21.9 விழுக்காடாக இருந்தனர். அது, 2022-23இல் 15.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள 95 விழுக்காட்டுப் பெண்க ளுக்கு அநேகமாக வேலை இல்லை அல்லது பாது காப்பான வருமானம் இல்லை. பெரும்பாலான பெண்கள் ஒன்றிய அரசாங்கத்தின் திட்டப் பணிகளில் ஊழியர்களாகப் (scheme workers) பணியாற்று கிறார்கள். சுமார் ஒரு கோடி பெண்கள் அங்கன்வாடி ஊழியர்களாகவும், ‘ஆஷா’ ஊழியர்களாகவும், மதிய உணவு ஊழியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

. அவர்கள் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவான ஊதியத்தை ‘அலவன்ஸ்’ என்ற பெயரில் பெற்று வரு கிறார்கள். அவர்களை அரசு ஊழியர்களாக அங்கீ கரித்திடவில்லை. மேலேகூறிய காலமுறையிலான தொழிலாளர் நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை யின்படி, விவசாயத் தொழிலில் பெண்களின் பங்கு 2018-19இல் 55.3 விழுக்காடாக இருந்தது, 2022-23இல் 64.3 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், குடும்பப் பண்ணைகளில் ஊதியம் பெறாது வேலை செய்வதேயாகும்.

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையை ஒன்றிய அரசாங்கம் கடுமையாக வெட்டிக் குறைத்திருக்கிறது. பல மாநிலங்களில் இத்திட்டத் தின்கீழ் 50 விழுக்காட்டுக்கும் 80 விழுக்காட்டுக்கும் இடையே வேலை செய்து வந்த பெண்களின் மத்தியில் இது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எதார்த்தத்தில், பெண்கள், அதிலும் குறிப்பாக தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள், ஒன்றிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் பாதிப்புகளை நேரடியாக எதிர்கொண்டு வருகி றார்கள். ஏனெனில் ஒன்றிய அரசாங்கம் தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தும் வேலைகளை, நாட்டில் 1 விழுக்காடாக இருக்கக்கூடிய பணக்காரர்கள் வசம் ஒப்புவித்திருக்கிறது. அவர்கள் தான் நாட்டின் 40 விழுக்காடு செல்வத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்.

எனவே, இங்கே நடைபெற்றுவரும் வளர்ச்சி என்பது கார்ப்பரேட் தலைமையிலான வளர்ச்சியேயொழிய, நிச்சயமாக பெண்களின் தலைமையிலானது அல்ல.